எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொலை- சக வீரர் வெறிச்செயல்
1 min read
5 Border Security Force soldiers shot dead – Fellow soldier manslaughter
5.3.2022
எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 எல்லை பாதுகாப்பு படை ஜவான்கள் பலியாகினர்.
துப்பாக்கியால் சுட்டார்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை ஒட்டிய காசா பகுதியில் இருக்கும் எல்லை பாதுகாப்பு படையினர் குழுவில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
அங்குள்ள எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 எல்லை பாதுகாப்பு படை ஜவான்கள் பலியாகினர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் குரு நானக் தேவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கான்ஸ்டபிள் சட்டெப்பா எஸ் கே நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்தனர். அவரும் காயமடைந்தார். காயமடைந்த 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உண்மையை கண்டறிவதற்காக முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தனர்.
இந்த அசம்பாவிதம் குறித்து இன்னும் முழுமையான தகவல் கிடைக்கப்பெறவில்லை.