July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5,476 பேராக குறைந்தது; 158 பேர் சாவு

1 min read

/////////////////////////

6/3/2022
இந்தியாவில்தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. ஒருநாளில் 5,476 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. 158 பேர் இறந்தனர்.

குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 5,921 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,476 ஆயிரமாக குறைந்தது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 62 ஆயிரத்து 953 ஆக உயர்ந்தது.

தொடர்ச்சியாக 28 நாட்களாக 1 லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதன் காரணமாக இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 442 ஆக குறைந்தது.

இன்று காலை வரை கடந்த ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 9 ஆயிரத்து 754 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது.

158 பேர் சாவு

கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று 289 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 158 ஆக குறைந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்தம் இதுவரை 1,78,83,79,249 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 26 லட்சத்து 19 ஆயிரத்து 778 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.///

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.