July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

புனேவில் புதிய மெட்ரோ திட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

1 min read

New Metro project in Pune – Prime Minister Modi launches

6.3.2022
புனேவில் புதிய மெட்ரோ திட்டத்தை துவக்கி வைத்து பயணிகளுடன் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

சிவாஜி சிலை

புனேவில் புதிய மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது. அந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதற்காகஅவர் புனே வந்தார்.
காலை 11 மணியளவில் புனே மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்தார். 9.5 அடி நீளம் கொண்ட இந்த சிலை 1,850 கிலோ உலோகத்தால் செய்யப்பட்டது ஆகும்.

பின்னர் காலை 11.30 மணிக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். கர்வாரே மெட்ரோ ரெயில் நிலையத்தை திறந்து வைத்த அவர், அந்த ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கு இருந்து ஆனந்த்நகர் வரை மெட்ரோ ரெயிலில் பயணிகளுடன் டிக்கெட் எடுத்து கொண்டு பயணம் செய்தார். அப்போது பள்ளி மாணவிகளுடன் உரையாடினார்.

32 கி.மீ தூரமுள்ள புனே மெட்ரோ ரெயில் திட்டத்தின் 12 கி.மீ தூரமுள்ள புனே மெட்ரோ ரெயில் திட்டத்தின் 12 கி.மீ வழி தடத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். ரூ. 11.40 கோடி செலவில் 12 கி.மீ தொலைவுக்கான மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஒவ்வொரு நகரத்திலும் ஸ்மார்ட் போக்குவரத்து வசதிகளுக்காக பசுமை போக்குவரத்து மற்றும் மின்சார வாகனங்களை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.
மெட்ரோ இணைப்பு உட்பட வெகுஜன போக்குவரத்தை அரசாங்கம் முன்கூட்டியே விரிவுபடுத்துகிறது. சுற்று பொருளாதாரத்தை மேம்படுத்தும் கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆலைகளுடன் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அமைப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப உதவும் ‘நதி திருவிழாக்களை’ அனுசரிக்க நகர்ப்புற நகரங்களை வலியுறுத்துகிறேன்.

புனே பசுமை எரிபொருளுக்கு பெயர் பெற்றது. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை சார்ந்திருப்பதை குறைக்க எத்தனால் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறோம். விவசாயிகளுக்கும் பயனளிக்கும் மையங்களை புனேவில் நிறுவியுள்ளோம்.

புனே ஒரு கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் மையமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. இதற்கு மத்தியில் புனே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். மெட்ரோ ரயில் மூலம் கார்பன் வாயு வெளியேற்றம் பெருமளவு குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.