பஞ்சாப் முதல்- மந்திரி சரண்ஜித்சிங் சன்னி போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வி
1 min read
Punjab First- Minister Saranjit Singh Sunny lost in both the contested seats
10.3.2022
பஞ்சாப் முதல்- மந்திரி சரண்ஜித்சிங் சன்னி, தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.
சரண்ஜித்சிங் சன்னி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்னை இடங்களை பெற்று ஆட்சி அமைக்கிறது. அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அந்தக்கட்சி 2வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்- மந்திரியான சரண்ஜித்சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். காங்கிரசை சேர்ந்த அவர், தான் போட்டியிட்ட சப்காப் சாஹிப் மற்றும் பதார் ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும், தோல்வியை தழுவி பெரும் ஏமாற்றமடைந்தார். ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி பஞ்சாபை கோட்டைவிட்டது.