தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100க்கு கீழ் குறைந்தது; 3-வது நாளாக உயிரிழப்பும் இல்லை
1 min read
Corona incidence in Tamil Nadu is less than 100; No casualties on the 3rd day
13.3.2022
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது. நேற்று 3-வது நாளாக உயிரிழப்பும் இல்லை.
சென்னை, மார்ச்.14-
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 223 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு பதிவாகவில்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 41 ஆயிரத்து 933 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் சென்னையில் 35 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 1,173 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
நெல்லையில் இன்று ஒருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது.