இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,539 பேராக குறைந்தது
1 min read
Daily corona exposure in India dropped to 2,539
18.3.2022
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஒரு நாளில் 2,539 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
குறைந்து வரும் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை ஓய்ந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இந்த தொற்று பாதிப்பு 2,876 பேருக்கு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 2,539 சற்று குறைந்து பதிவாகி இருந்தது.
இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் பெருமளவு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது., இந்தியாவில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 528 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்றைய பாதிப்பை ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும்.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,04,005 ஆக அதிகரித்துள்ளது.
149 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 149 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,16,281 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,997 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,458,543 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 29,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 6,33,867 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 78,18,58,171 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.