சிலை திருடியதா பொய் வழக்கு போட்டு குருக்கள் கைது; கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
1 min read
Gurus arrested on false charges of stealing idols; Villagers protest
18/3/2022
சிலை திருடியதாக பொய் வழக்குப் போட்டு குருக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சிலை திருட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மன்னன் கோயில் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் சாமி நல்ல காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது
இந்த கோவிலுக்கு சொந்தமான நல்ல காத்தாயி அம்மன் கஞ்சமலை ஈஸ்வரர் விநாயகர் ஆஞ்சநேயர் ஆகிய நால்வரின் உலோகத்தாலான சிலைகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது இதுதொடர்பான புகாரின்பேரில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் கன்னிமேரி கிராமத்தில் வசிக்கும் கோவில் குருக்கள் சூரியமூர்த்தி இடம் விசாரணை நடத்தினர் தொடர்ந்து நிம்மதி கோவில் விசாலாட்சி அம்மன் கருவறையில் இருந்த உலோக சிலை மற்றும் வெள்ளிக் கவசங்கள் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி சூரிய மூர்த்தியை கைது செய்தனர்
வேறு சிலை
குறைந்த வருவாயில் பூஜை செய்வதை மட்டுமே கொண்டு வாழ்ந்த குருக்கள் சூரியமூர்த்தி கைது செய்யப்பட்டதை அறிந்த நிம்மதி மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் . மன்னன் கோயில் மன்னர் சுவாமி கோவில் நெம்மேலி விசுவநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பூஜை செய்துவந்த சூரியமூர்த்தி குருக்கள் கைது செய்யப்பட்டபோது போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுவாமி சிலை நெம்மேலி கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோவிலுக்கு சொந்தமானது .
அந்த கோவில் சிதிலமடைந்து அங்கு இருந்த சிலையை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போது அதனை அவர்கள் ஏற்க மறுத்த நிலையில் அந்த சிலைகள் சூரியமூர்த்தி இடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்ததாக கூறும் கிராமவாசிகள்,கவசங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் அனைத்தும் உபயதாரர்கள் வழங்கும் போது அவற்றை பூஜை நேரம் தவிர மற்ற நாட்களில் பாதுகாப்பாக வீட்டில் வைக்க சொன்னதால் அவர் தனது பொறுப்பில் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.இதனால் சூரிய மூர்த்தி குருக்கள் கைது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது .
இந்நிலையில் கிராமமக்கள் விசுவநாதர் கோவிலில் கூடி ஆலோசனை நடத்தினர் அப்போது அங்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் உண்மை நிலையை விளக்கியதுடன் சூரியமூர்த்தி குருக்கள் கைது செய்யப்பட்டதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.தொடர்ந்து போலீஸ் விசாரணையின்போது உண்மையை மறைக்காமல் சொன்னதால் சூரியமூர்த்தி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது
அதன்படி சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே எந்த முகாந்திரமும் இன்றி பொய் வழக்குப்போட்டு குருக்கள் சூரிய மூர்த்தியை கைது செய்த சிலை திருட்டு தடுப்பு போலீசாரை கண்டித்தும் அவரை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் பொய் வழக்குப்போட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நெம்மேலி, ராமாபுரம் ,நந்திய நல்லூர் கிராமம் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் பாபு வெங்கட்ராமன், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பாளர் செந்தில் ஜி, பாஜக மாவட்ட ஊடக அணித்தலைவர் குருசங்கர், அகில பாரத இந்து சபா மாநில செயலாளர் நிரஞ்சன், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்க மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் சந்திரசேகரன், அகில பாரத மக்கள் கட்சி தலைவர் பாபு பரமேஸ்வரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.