June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்/ காழியூர் நாராயணன்

2 min read

Ragu-Kedu Peyarchi Palankal by Kaliyur Narayanan

20.3.2022
ஒரு ராசிகட்டத்தில் அதிக நாட்கள் இருக்கும் சனி, ராகு-கேது, குரு ஆகியவற்றின் பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.அந்த வகையில் ராகு-கேது பெயர்ச்சியும் மானிடர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும். ராகு-கேது கிரகங்களுக்கு உருவம் கிடையாது. சூரியன்-சந்திரன் சுற்றுப் பாதையில் அவை சந்திக்கும் இரு புள்ளிகளைத்தான் ராகு-கேது என்கிறோôம். பொதுவாக எல்லா கிரகங்களும் கடிகார முள்சுற்றும் திசையில் சுழல்கின்றன. ஆனால் ராகுவும், கேதுவும் மட்டும் எதிர் திசையில் சுற்றிவருகின்றன.
ராகுவும்-கேதுவும் நேர் எதிர்எதிரே நின்று சுழலக்கூடியவை. அவை இரண்டும் ஒரேநாளில்தான் இடம் பெயருவார்கள். 21-3-2022 அன்று (திங்கள் கிழமை) பகல் 3-13 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. தற்போது ரிஷப ராசியில் இருக்கும் ராகு மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விருச்சிக ராசியில் இருக்கும் கேது துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவர்கள் அங்கு 8-10-2023 வரை இருப்பார்கள்.
இந்த ஆண்டில் முக்கிய கிரகங்களில் குரு பெயர்ச்சி அடைகிறார். தற்போது கும்ப ராசியில் இருக்கும் குருபகாவன் வாக்கிய பஞ்சாங்கபடி ஏப்ரல் 14-ந் தேதி அன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4-16 மணிக்கு மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசியில் இருக்கும் குருபகவான் 20-6-2022 அன்று வக்கிரம் அடைந்து 16-11-2022 வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார். மீனராசியில் இருக்கும் குருபகாவன் 2023 ஏப்ரல் 22-ந் தேதி அன்று மேஷ ராசிக்கு மாறுகிறார். தற்போது மகர ராசியில் இருக்கும் சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கபடி 25-5-2022 அன்று வக்கிரம் அடையத் தொடங்குவார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். 9-10-2022 வக்கிர நிவர்த்தி அடைகிறார். அடுத்த சனிப்பெயர்ச்சி 29-3-2023 அன்று நடக்கிறது. அப்போது அவர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
இங்கே தரப்பட்டிருப்பது கோச்சார பலன்களே. இதில் சிலருக்கு சுமாரான பலன்களே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அவர்கள் ஜாதகத்தில் நல்ல திசை, புத்தி நடந்தால் நன்மையே நடக்கும். அதனுடைய பாதிப்பும் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். இங்கே ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களால் இயன்ற பரிகாரத்தை செய்தால் போதும். -காழியூர் நாராயணன்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! நிழல்கிரகமான ராகு 2-ம் இடமான ரிஷபத்தில் உள்ளார்.இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். அதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம் .ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கும்பத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். ராகு மார்ச் 21-ந் தேதி அன்று உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார்.
கேது 8-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு கேதுவால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல்நலக்குறைவு முதலியன வரலாம். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 7-ம் இடத்திற்கு மாறுகிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்தது போல் கெடு பலன்கள் நடக்காது. 7-ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்சினையை -யும், அலைச்சலையும் தரலாம். வீண்மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்சினை வரலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 11-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர் ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 12-ம் இடமானமீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் பொருள் நாசம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் ஜுன்20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந்தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் மீன ராசியிலேதான் இருக்கிறார். எந்த கிரகமும் வக்கிரத்தில் சிக்கும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது.
சனிபகவான் 10-ம் இடத்தில் உள்ளார். இதனால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம். இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.காரணம் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் மகர ராசியிலேதான் இருக்கிறார். எந்த கிரகமும் வக்கிரத்தில் சிக்கும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற நிலையில் இருக்கும் சனிபகவான் வக்கிரம் அடைந்தால் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்காது அல்லவா? இன்னும் சொல்லப்போனால் அவரால் நன்மையே கிடைக்கும்.
இனி விரிவான பலனை காணலாம்
செலவு அதிகரிக்கும். கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 2023மார்ச் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும்.பொன், பொருள் கிடைக்கும். சகோதரிகள் மிக உறுதுணையாக இருப்பர். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.
உத்தியோகம்: இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிகமாக போராடியே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வக்கீல்களுக்கு 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
வியாபாரம்: பொருள் விரையம் ஏற்படும். வாடிக்கையாளரை அதிக முயர்ச்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும்.சிலர் ஊர்விட்டுஊர் செல்லும் நிலை உருவாகும். இருப்பிடமாற்றம் ஏற்படலாம். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம். இருப்பினும் இந்தகால கட்டத்தில் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள்ராசிக்கு 3-இடத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். 2023மார்ச் மாதத்திற்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர்.எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். பொருளாதார வளம் கூடும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர். மாணவர்கள்: ஆசிரியர்கள் ஆலோனைபடி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
விவசாயிகள்: உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறஇயலாது.வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபத்தில் குறை இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு உற்சாகம் பிறக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பணப் புழக்கம் அதிகரிக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண வரவு இருக்கும். உடல்நலம்: ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
பரிகாரம்: வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள். விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு உறுதுணையாக இருக்கும். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இப்போது இந்த ராகு-கேது பெயர்ச்சி மூலம் நன்மை கிடைக்க உள்ளது. கேது தற்போது 7-ம் இடத்தில் இருப்பதால் மனைவி வகையில் பிரச்சினையையும், அலைச்சலையும் தரலாம். வீண்மன வேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்சினை வரலாம். மார்ச் 21-ந் தேதி அன்று அவர் 6-ம் இடமான துலாம் ராசிக்கு வருவதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும்,பொருளும் தாராளமாக கிடைக்கும். காரியஅனுகூலம் ஏற்படும். மேலும்அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த பொருளாதார வளம் மேம்படும். மேலும் நகை-ஆபரணங்கள் வாங்கலாம். நினைத்த காரியம் நிறைவேறும்.
ராகு உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். ஆனால் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இதுவும் சுமாரான நிலைதான்.இங்கு அவரால் நற்பலனை தரஇயலாது. பொருள் விரயத்தையும்,தூரதேச பயணத்தையும் கொடுப்பார். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 10-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குருசாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். அவர் ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 11-ம் இடமான மீனராசிக்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம். அப்போது அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். மேலும் அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் மூலமும் நற்பலனை தருவார்.
சனிபகவான் தற்போது 9-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம், எதிரிகளால் பிரச்சினை வரலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். மேலும் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் மகர ராசியிலேதான் இருக்கிறார். எந்த கிரகமும் வக்கிரத்தில் சிக்கும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற நிலையில் இருக்கும் சனிபகவான் வக்கிரம் அடைந்தால் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்காது அல்லவா? இன்னும் சொல்லப்போனால் அவரால் நன்மையே கிடைக்கும்.
இனி விரிவான பலனை காணலாம்
குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். காரிய அனுகூலம் எளிதாகும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் வரலாம். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும்.
வியாபாரம் வளர்முகமாக இருக்கும். பணப்புழக்கம் மிகஅதிகமாக இருக்கும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றி கடனுடன் இருப்பர். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பு பெறுவர். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு குரு சாதகமாக இருப்பதால் அனுகூலமான காற்று வீசும். சிறப்பான நிலையை காணலாம். நல்ல மதிப்பெண் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பாசிபயறு, நெல், மஞ்சள், கொண்டைக்கடலை,கொள்ளு,துவரை, பழவகைகள் நல்ல வருவாயைக் கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும்.கோழி,ஆடு வளர்ப்பில்நல்ல வருமானத்தை பெறுவர். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.புதியசொத்து வாங்க அனுகூலம் உண்டு. பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். சுபநிகழ்ச்சி- களில் கலந்துகொள்வர்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர் -கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர்.பெண் காவலர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உஷ்ணம்,தோல்,தொடர்பான நோய் முதலியன பூரண குணம் அடையும்.
பரிகாரம்-
திருநாகேசுவரம்-திருபெரும்பள்ளம் அல்லது காளகஸ்தி ஆகிய தலங்களுக்குச் சென்று வரலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஏப்ரல் 13-ந் தேதி வரை குரு பகவானுக்கு முல்லை மலர் மாலை அணிவித்து வணங்குங்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். கேது தற்போது 6-ம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார். இது மிகச்சிறப்பான இடம். அவரால் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த பொருளாதார வளம் மேம்படும்.காரிய அனுகூலம் ஏற்படும். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 5-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை.இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். ஆனால் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு11-இடமான மேஷத்தில் விழுகிறது. இதன் மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
ராகு தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலைதான். இங்கு அவரால் நற்பலனை தரஇயலாது. பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்-பார்வை உங்கள்ராசிக்கு 6-இடமான விருச்சிகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் உங்கள்ஆற்றல் மேம்படும்.முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மார்ச் 21-ந் தேதி அன்று அவர் இடம் மாறி 11-ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார்.அவரால் பொன்,பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருகிறார். இது மிகச்சிறப்பான இடம். மனமகிழ்ச்சி இருக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவி -கரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கிறது. இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும்.ஆனால் குருபகவான் ஏப்ரல்14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 10-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம்இல்லை. அப்போது குரு பொருள் நஷ்டத்தையும்,மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். குரு ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் மீன ராசியிலேதான் இருக்கிறார். எந்த கிரகமும் வக்கிரத்தில் சிக்கும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது.
சனிபகவான் தற்போது 8-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார்.அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும்.சிலர் ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை உருவாகும்.-இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்தான். ஆனால் இந்த கெடு பலன்கள் அப்படியே நடக்குமோ என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை சனிபகவான் வகிக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். அவரால் கெடுபலன் -கள் நடக்காது. 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு சனி பகவானின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் பொருளாதார வளம் கூடும். நல்ல பணப்புழக்கத்துடன் காணப்படுவர்.
இனி விரிவான பலனை காணலாம்
பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். ராகு பொருளாதாரத்தில் நல்ல வளத்தைத் தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். மேலும் குருவின் பார்வையால் துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம்.
உத்தியோகத்தில் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். அதே பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
வியாபாரம் சிறப்படையும். கடந்த கால நஷ்டம் இருக்காது. அதிக வருமானத்தைக் காணலாம். மேலும் குருவின் பார்வையால் பண வரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும்.வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள். அதன் மூலம் வளர்ச்சியை அடையலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். பொதுநல சேவகர்களுக்கு புகழ், பாராட்டு வரும். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.
விவசாயிகள் நல்ல வளத்தைக் காணலாம். பூமியில் விளையும் அனைத்து பொருள்களும் நல்ல மகசூலைத் தரும். உளுந்து, எள், பனைபொருள் மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு குரு மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்கு -வார். இருப்பினும் குருபகவானின் 5-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
பரிகாரம்- சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழக் கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம்.

கடகம்

கடக ராசி அன்பர்களே!ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான ரிஷபத்தில் இருப்பது மிகச்சிறப்பான இடம் ஆகும். பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மேஷத்திற்கு செல்வது சிறப்பான இடம் இல்லை. அவரால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அவர் பொருள் இழப்பையும், சிறுசிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார்.
கேது தற்போது 5-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இந்த இடத்தில்அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். உடல் நலப்பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்சினையையும் தரலாம். ஆனால் இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பாக அமைந்து உள்ளது.அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 4-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். அவரால் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல்நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினை வரும்.ஆனால் அவரது பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமையை பெறலாம்.
குருபகவான் தற்போது 8-ம் இடமான கும்ப ராசியில் உள்ளார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குருபகவான் மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார். ஆனால் இதனை கண்டு நீங்கள்அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவர் ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 9-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அப்போது குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.பின்னடைவுகள் மறையும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர் -கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். மேலும் குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. அதன்மூலம் குரு குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்.
தற்போது சனிபகவான் 7-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்கு -வார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம் என்பது பொதுவான பலன்கள். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலங்களில் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசியில்தான் இருக்கிறார். பொதுவாக சனிபகவானால் நன்மைதர இயலாது ஆனால் வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார் மாறக நன்மையே தர ஆயத்தமாவார்.
இனி விரிவான பலனை காணலாம்
ராகு,கேது சாதகமற்ற பலனை தந்தாலும் குருபகவான் குடும்பத்தில் குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். மதிப்பு, மரியாதை இருக்கும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும்.
உத்தியோகம்: வளர்ச்சி காணலாம்.வேலையில் திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர்.
வியாபாரம்: பகைவர்களின் தொல்லைகள் உங்களுக்கு தடையைத் தந்தாலும் பொருளாதார வகையில் எந்த பின்தங்கிய நிலையும் வராது. அதிக முதலீடு செய்ய வேண்டாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகநல சேவகர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். நற்பெயர் கிடைக்கும் கல்வியில் சிறப்படைவர். பல்வேறு போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். குடும்பத்தரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும்.
உடல் நலம் பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்- பெருமாள் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வாருங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஏப்ரல் 13-ந் தேதி வரை குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த ராகு-கேது பெயர்ச்சி மிக சிறப்பாக அமையும். கேது தற்போது 4-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இந்த இடத்தில் இருக்கும் போது அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினை வரும். ஆனால் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு6-இடமான மகரத்தில் விழுகிறது. இதனால் இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளா -தாரவளம் அதிகரிக்கும். எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமையை பெறலாம். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 3-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம். அங்கு அவர் நற்பலனை தருவார். அவர் இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார்.
ராகு தற்போது உங்கள் ராசிக்கு 10-ம் இடமான ரிஷபத்தில் இருப்பது சிறப்பான இடம் இல்லை. அவரால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 9-ம் இடமான மேஷ ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.ஆனால் பலாபலன்கள் மாறுபடும்.உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. அவரால் காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.அதற்காக கவலை-கொள்ள தேவை இல்லை காரணம் அவரின் 4,7, மற்றும் 11-ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
சனிபகவான் இந்த ஆண்டு முழுவதும் நன்மை தருவார். அவர் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மகரத்தில் இருப்பது மிகச்சிறப்பான இடம் ஆகும். நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றி -யையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளைஇருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர். மேலும்சனியின்10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலம் அவர் பொருளாதார வளத்தையும்,காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர்வை தருவார். அவர் ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 8-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது குரு மனவேத -னையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். அதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரின் 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளது.
இனி விரிவான பலனை காணலாம்
கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.2023 மார்ச் மாதத்திற்கு பிறகு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் இருக்கும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய பதவி கிடைக்கும். தனியார் துறையில் பார்ப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். இருப்பினும் குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் நன்மைகள் கிடைக்க பெறலாம். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு வேலைப்பளு குறையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலைகிடைக்கப்பெறுவர்.வேலையின்றி இருப்பவர் களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். மேலும் குரு,ராகுவின் பார்வையால் பணவரவு கூடும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள். தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். புகழ் கவுரவத்திற்கு பங்கம் வராது. அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சிறப்பான பலனைக் காண்பர்.முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின்பார்வையால் கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பியபாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.
விவசாயம்: எள், சோளம், கேழ்வரகு, தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தைப் பெறுவர்.
பெண்கள் நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உற்சாகமான நிலையை அடைவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும். பூவியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல்நலம்:சிறப்பாகஇருக்கும்.வாயு தொடர்பான உபாதை பூரண குணம் அடையும்.
பரிகாரம்: காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். அதிகாலையில் விளக்கு ஏற்றுங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். குறிப்பாக நீலம் மற்றும் பல வண்ண நிற துணிகளை கொடுத்து வாருங்கள். ஏப்ரல் 13-ந் தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! கேது தற்போது 3-ம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம். அங்கு அவர் இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். மார்ச் 21-ந் தேதி அன்று கேது 2-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு11-இடமான கடகத்தில் விழுகிறது.இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ராகு தற்போது 9-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். எதிரிகளின் இடையூறு தலைதூ -க்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இதற்காக கவலைகொள்ள தேவை-இல்லை காரணம்அவரது 4,7,மற்றும்11-ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சாதகமாக உள்ளன. இதன் மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 8-ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினை -களை உருவாக்கலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். ஆனால் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இருக்காது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேது 3-ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து நன்மைகள் தந்து கொண்டிருக்கிறார் அவர் மார்ச் 21-ந் தேதி சாதகமற்ற இடத்திகு சென்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை காரணம் குருபகவான் ஏப்ரல் 14-ந் தேதி சாதகமான இடத்திற்கு வந்து நற்பலனை தருவார்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கிறார். பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் ஆனாலும் அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப்பார்வை மிகவும் சாதகமாக காணப் -படுகிறது. குருவின் பார்வை மூலம் துணிச்சல் பிறக்கும்.பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. மேலும் அவர் ஏப்ரல்14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 7-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவர் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோ -கஸ்தர்களுக்கு உயர்வை தருவார். மேலும் அப்போது அவரது 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலமும் நற்பலன் கிடைக்க பெறுவீர்கள்.
தற்போது சனிபகவான் 5-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை தருவார் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடிகொள்ளலாம். அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும். மேலும் சனிபகவான் மே 21-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார். 2023 மார்ச் 29-ந் தேதி சனிபகவான் அன்று 6-ம் இடமான கும்பத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம்.மேலும் அவரது10-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமைந்து உள்ளது
இனி விரிவான பலனை காணலாம்
ராகுவால் சிறுசிறு தடைகள் வரலாம். அதேநேரம் குருவால் இவைகளை ஈடுகட்டும் வகையில் துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மேல்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசுஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்க- வும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் முன்னேற்றம் காணலாம்.அலைச்சல் அதிகரிக்கும்.அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப் படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.அச்சகம்,பத்திரிகை,பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர்.2023 மார்ச் மாதத்திற்கு பிறகு உங்கள் ஆற்றல் மேம்படும். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வீண்விரயம் குறையும். புதிய தொழில் வளர்ச்சி அடையும். லாபம் சிறப்பாக இருக்கும்.
கலைஞர்கள்:முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங் -கள் கிடைக்கும். சமூகநல சேவகர் எதிர்பார்த்த புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகள் சிறப்பு அடைவர்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். மஞ்சள், பயறு வகைகள், பழவகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம். கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பு மூலம் வருமானம் காணலாம்.
பெண்களுக்கு சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கவனம் தேவை. கண் தொடர்பான உபாதைகள் வரலாம்.
பரிகாரம்- சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு பூஜை செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து தானம் செய்யுங்கள். ஏப்ரல் 13-ந் தேதி வரை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்தியைவணங்கி வாருங்கள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே! ராகு தற்போது 8-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 7-ம் இடமான மேஷத்திற்கு வருகிறார்.இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அவரால் இடப் பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும் யாரிடமும் கவனமாக பழகவேண்டும்.
தற்போது கேது 2-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் நன்மை தர இயலாது.. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பழைய கெடுபலன்கள் இனி இருக்காது. அவர் சிறுசிறு தடையையும், உடல் உபாதையையும் தரலாம்.அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான தனுசு ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
குரு 5-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார்.இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்திவைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். ஆனால் அவர் ஏப்ரல்14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 6-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும். ஆனால் அப்போது குருவின் 9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.
சனிபகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனி வீண்விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம்.சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் நன்மை கிடைக்கும். அவர் 2023 மார்ச் 29-ந் தேதி அன்று 5-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் அப்போது அவரது 7-ம் இடத்துப் பார்வை மூலம் நற்பலனை தருவார்.
இனி விரிவான பலனை காணலாம்
முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லாத காலக்கட்டம். எடுத்த காரியத்தில் அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள். பண வரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். வீண் வாக்கு வாதத்தில் ஈடுபடவேண்டாம். சுபநிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம்.பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு.இருப்பினும் குருவின் 9-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். துணிச்சல் பிறக்கும். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். தம்பதியினரிடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் பளுவும்,அலைச்சலும் இருக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். குருவின் பார்வையால் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும் இல்லை.
வியாபாரம் இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பணவிரையம் ஏற்படலாம். வாடிக்கையாளரை அதிக முயற்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும். அரசுவகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு மறையும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். குருவின் 9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சீராக கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். அரசியல்வாதிகள், சமூகநல சேவககர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. அரசியல்வாதிகள் சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுவது நல்லது. குருவின் பார்வையால் தேர்வுகள் சிறப்பாக எழுதுவீர்கள். விவசாயம் சீராக இருக்கும். உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவை குறையுங்கள். விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.உடல் நலனை பொறுத்தவரை கேதுவால் சிற்சில உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது.
பரிகாரம்- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து அதை காக்கைக்கு போடுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். ஏப்ரல் 13-ந் தேதிக்கு பிறகு சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ராகு-கேது பெயர்ச்சி முன்னேற்றங்களை தரும். தற்போது ராகு 7-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழகவேண்டும்.அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 6-ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். இனி மேற்கண்ட இடர்பாடுகள் வராது. அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார். மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வையால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.
கேது தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் அல்ல. அவர் காரிய தடையையும், உடல் உபாதையையும் தரலாம். ஆனால் அவரின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வையால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு போகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
சனிபகவான் ஆண்டு முழுவதும் அவர் நன்மை தருவார். அவர் உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மகரத்தில் இருப்பது மிகச்சிறப்பானதாகும். அவர் உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார்.தொழிலில் சிறந்தோங்க செய்வார். 2023 மார்ச் 29-ந் தேதி உங்கள் ராசிக்கு 4-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. ஆனால் அவரின் 3-ம் இடத்துப் பார்வையால் நற்பலனை தருவார்.
குருபகவான் 4-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். இந்த இடம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண்பகையையும் உருவாக்குவார். ஆனால்அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம். மேலும் இங்கு குரு நீண்டநாட்கள் இருக்க மாட்டார். அவர் ஏப்ரல்14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 5-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம். அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அப்போது அவரது 5,7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலமும் நற்பலன் கிடைக்க பெறுவீர்கள்.
இனி விரிவான பலனை காணலாம்
இந்த காலத்தில் குருவும், ராகுவும் பல்வேறு முன்னேற்றங்களை தருவார்கள். இதனால் நன்மை- கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்படையும். பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். தடைகள் அனைத்தும் விலகும். வாகன சுகம் கிடைக்கும். குருவால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிட்டும். செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மேல்அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது.
வியாபாரிகளுக்கு கடந்தகாலத்தில் எதிரிகளின் இடையூறுகள் உங்களை அவ்வப்போது பாடாய்-படுத்தி இருக்கும். இனி அந்த நிலையில் இருந்து விடுபடுவீர்கள். தடையின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். இதனால் வீண் விரையம் தடைபடும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு சனியின்3-ம் இடத்துப் பார்வையால் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள்.
கலைஞர்கள் திருப்திகரமான பலனைக் காணபர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். உங்கள்செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும். பொதுநல சேவகர்கள் நல்லபெயர் எடுப்பர்.
மாணவர்கள்: கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்குச் செல்வர். குரு சாதகமாக இருப்பதால் ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் எள், கரும்பு, உளுந்து மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம்.புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள் முன்னேற்றம் அடைவர். குரு குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் படிபடியாக மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும்.
கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற சிற்சில உபாதைள் வரலாம்.
பரிகாரம்: பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நாயனாரை வணங்கவும். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள். மார்ச் 21-ந் தேதி வரை ஏழைகள் படிக்க உதவுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறலாம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்களுக்கு சுமாரான பலனை தந்தாலும் கேது சிறப்பான பலனை தருவார்.
ராகு தற்போது 6-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். காரிய அனு கூலத்தைக் கொடுப்பார். மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான கும்பத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வையால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 5-ம் இடத்திற்கு வருவதால் நன்மைகள் தரமாட்டார். இன்னல்களையும், இடையூறுகளையும் அவர் தரலாம்.மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப்படைக்கலாம். ஆனால் அப்போது அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
கேது தற்போது 12-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். மார்ச் 21-ந் தேதி அன்று அவர் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாம் ராசிக்கு போகிறார்.அவர் நல்ல வளத்தை கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் கொடுப்பார். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ராகு சாதகமாக அமைந்திருக்கும் சூழ்நிலை -யில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆண்டின் முற்பதியில் ராகுவும் பிற்பகுதியில் கேதுவும் நன்மைகள் தருவார்கள் இதனால் இந்த ஆண்டு உங்களுக்கு சீரும், சிறப்புமாக இருக்கும்.
குருபகவான் 3-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள் -தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். பணவரவு இருக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.அவர் ஏப்ரல்14-ந் தேதிபெயர்ச்சி அடைந்து 4-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் இல்லை. குரு மனஉளச்சலையும், உறவினர்வகையில் வீண்பகையையும் உருவாக்குவார். அவர் 2023 ஏப்ரல் 22-ந் தேதி அன்று 5-ம் இடத்திற்கு செல்வதால் நன்மைகள் தருவார்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. பொருட் -களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும்.இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தரதயங்க மாட்டார்.மேலும் சனி பகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.அவர் 2023 மார்ச் 29-ந் தேதி அன்று 3-ம் இடத்திற்கு செல்வதால் நன்மைகள் தருவார்.
இனி விரிவான பலனை காணலாம்
கேதுவால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதனால் துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். உறவினர்கள் வகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.2023 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம்போன்ற சுபநிகழ்ச்சிகள்கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உத்தியோகம் வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு ஆசிரியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். குருவால் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். மனைவி பெயரில் உள்ள தொழில் சிறப்படையும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிகமுதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். அதைவிட இருப் -பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம் உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு சனிபகவான் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும், தொழில் விருத்தியையும் தருவார். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவர். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள்: அசட்டையாக இருந்து விட வேண்டாம்.
விவசாயம் பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு தோழிகளால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் உங்கள் பொறுப்பு- களை நீங்களே கவனிக்க வேண்டும்.சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.
உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் அடைவர். நீண்ட காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.
பரிகாரம்: ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டக்குடி, பட்டமங்கலம் போன்ற ஏதாவது ஒரு குருத்தலத்திற்கு சென்று வாருங்கள். கொண்டைக்கடலை தானம் செய்யலாம். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்

மகரம்

மகர ராசி அன்பர்களே! ராகு உங்கள் ராசிக்கு 5-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் இன்னல்களையும், இடையூறுகளையும் தரலாம். குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம்புரியாத வேதனை ஆட்டிப்படைக்கலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான விருச்சிகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். மார்ச் 21-ந் தேதி அன்றுராகு 4-ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் முயற்சி -களில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 10-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால் கேது பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார்.
குரு,கேது சாதகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது. கேது 11-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து நல்ல வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் அவர் கொடுப்பார்.
குரு பகவான் 2-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான அம்சம். இதனால் இடர்பாடுகள்அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.தேவையான பொருட்களை வாங்கலாம். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள். தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.ஆனால் அவர் ஏப்ரல்14-ந் தேதி 3-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் பணவரவு இருக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
சனிபகவான் உங்கள்ராசியில் இருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்படலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். காரணம் சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களைப் பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். மேலும் சனிபகவான் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் கெடு பலன்களை தரமாட்டார்.
இனி விரிவான பலனை காணலாம்
குடும்பத்தில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குருபார்வையால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு சனியின் 10-ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும்.பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
உத்தியோகம் வேலையில் கவனமாக இருக்கவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. குருபார்வையால். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். எப்போதும் அவர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. ஆனாலும் உங்கள் புத்தியால் அதை முறியடித்து வெற்றி காண -லாம். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேறம் அடையலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு சனியின்10-ம் இடத்துப் பார்வையால் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். போட்டியாளர்கள் வகையில் இடையூறுகள் வரலாம். பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மனக்குழப்பம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள்.
மாணவர்கள் அசாதாரணமாக இருக்க வேண்டாம். குருவின் பார்வையால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயிகள் அதிக முதலீடு போடும் விவசாய பயிரை தவிர்க்கவும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் அக்கம் பக்கத்தினர்களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. வீட்டினுள் இருந்த சிற்சில பிரச்சினை, உறவினர்கள் வகையில் ஏற்பட்ட மனக்கிலேசம் பொருள் இழப்பு முதலியன குருவின் பார்வையால் மறையும். குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கை நிறைவேறும்.
உடல் நலம் சுமாராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும். பைரவர் வழிபாடு சிறப்பைத் தரும். சனிக்கிழமை பெருமாளையும் வியாழக்கிழமை சிவனையும் வழிபடுங்கள். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் முருகனை வழிபட்டு வாருங்கள்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! ராகு 4-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இந்த இடம் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம். ஆனால் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று இடம் பெயர்ந்து 3-ம் இடமான மேஷத்திற்கு வந்து பல்வேறு நன்மை- களை தரஉள்ளார். குறிப்பாக காரியஅனுகூலத்-தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் கொடுப்பார்.
கேது 10-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 9-ம் இடமான துலாம் ராசிக்கு போகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்லதான். ஆனால் அவரால் இருந்து வந்த உடல் உபாதைகள் குணம் அடையும். அதேநேரம் கேதுவால் பொருள் இழப்பையும், காரிய தோல்வியையும் காணலாம். அவரால் பொருள் நஷ்டம் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. ஆனால் அவரது பின்னோக்கிய 4,7,11-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.இதன்மூலம் தெய்வ அனுகூலம் கிடைக்கும்.உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
குரு தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார் இது சுமாரான நிலையே. குரு1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு.மேலும் அதிக நாட்கள் அவர் இங்கு இருக்க மாட்டார். அவர் ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான மீனராசிக்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள். தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
சனிபகவான் தற்போது 12-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு. இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7-ம் இடத்துப்பார்வை கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர் கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள்ஆற்றல் மேபடும். மகர ராசியில் இருக்கும் சனிபகவான் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசிக்குள்- ளேயே இருக்கிறார். இந்த காலத்தில் அவர் கெடுபலன்களை தரமாட்டார்.
இனி விரிவான பலனை காணலாம்
ராகு, குருவால் சிறப்பான நிலையை காணலாம். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளால் பெருமை காணலாம். பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். வீடு மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். கேதுவின் பின்னோக்கிய 4,7,11-ம் இடத்து பார்வையால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
உத்தியோகம் வளர்ச்சி காணலாம். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பதவிஉயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.
வியாபாரிகள் பண விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ராகுவால் பகைவர்களின் தொல்லைகள் குறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு சனிபகவானின் 3-ம் இடத்து பார்வையால் பல்வேறு நன்மைகளை தருவார். குறிப்பாக அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், தொழில் விருத்தியை -யும் தருவார்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். .எதிர்பார்த்த புகழ் பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி,பொறுப்புகளை பெறலாம். நல்ல வசதியுடன் இருப்பர்.
மாணவர்களுக்கு கல்விவளம் பெருகும். ஆசிரியரிடம் நன்மதிப்பு கூடும்.நற்பெயரை எடுப்பர்.பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் பொருளாதார வளத்தில் சிறப்படைவர். என்ன பயிர் செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். பாசிபயறு நெல், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். நவீன விவசாயத்தை பயன்படுத்தி வளம் காணலாம். வழக்கு விவகாரங் கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். கணவன்மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். பெரியோர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பொன், பொருட்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அண்டை வீட்டார் அனுகூல- மாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்லவருமானத்தைப் பெறுவர். உடல் நலம் சிறப்படையும். கண் தொடர்பான உபாதை பூரண குணம் ஆகும்.
பரிகாரம்- சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகரை வணங்கி வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சைபழ விளக்கு ஏற்றி பூஜை செய்யவும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே! ராகு 3-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 2-ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட் -களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். ஆனால் ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.
கேது தற்போது 9-ம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார்.அங்கு அவர் நன்மை தரமாட்டார்.அவரால் முயற்சிகளில் தோல்வி ஏற்படும். பொருள் நஷ்டம் வரலாம்.உடல் ஆரோக்கியம் குறையலாம். .அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் அவரது பின்னோக்கிய 4,7,11-ம் இடத்துப் பார்வை- கள் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினை -யையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதன்மூலம் தெய்வ அனுகூலம் கிடைக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.அவர் மார்ச் 21-ந் தேதி அன்று கேது 8-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு கேதுவால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல் நலக் குறைவு முதலியன வரலாம்.
சனி,ராகு ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் மலர்கிறது. இதனால் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தருவார்.அவரால் பொன், பொருள் கிடைக்கும்.மகிழ்ச்சியும்,ஆனந்தமும் அதிகரிக்கும்.பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும். ஆனால் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை சனி வக்கிரத்தில் உள்ளார். சனி பகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும்.
குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்துபோய்விட வேண்டாம். குருபகவான் கெடுபலனை செய்யும் போது அது உங்களுக்கு இறுதியில் நன்மையிலேயே முடியும். அவர் ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் இல்லை. அவரால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினை வரலாம்.வேலையில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம். அப்போது குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
இனி விரிவான பலனை காணலாம்
ராகு,கேது சாதகமற்ற பலனை தந்தாலும் குரு பார்வையால் கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். பெண்களின் ஆதரவு உண்டு. அவர்களால் பொருள் சேரும்.விருந்து விழா என சென்று வருவீர்கள். குருபார்வையால் உற்சாகம் பிறக்கும்.நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்திஆகும்.குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும்.பெண்கள் மூலம் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம்காணலாம். ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். சகோதரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். 2023 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குருவால் துணிச்சல் பிறக்கும்.பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். உங்களை புரிந்து- கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
உத்தியோகத்தில் குரு பார்வையால் வேலைப்பளு குறையும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். மேல்அதிகாரிகள் அனு சரணையாக நடந்து கொள்வர். சகஊழியர்களின் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். பாதுகாப்பு தொடர் -பான வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. 2023 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஆசிரியர்களுக்கு பதவி, சம்பள உயர்வுக்கு தடைஏதும் இல்லை. சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்நல்ல முன்னேற்றம் அடையும். சிலர் வியாபார விஷயமாக வெளிநாடுசென்று வருவீர்கள். பங்குவர்த்தகம் நல்லலாபத்தைத் தரும். எதிரிகளின் இடையூறுகள் வரலாம். அவர்கள் வகையில் ஒருகண் இருப்பது நல்லது. 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு சனிபகவானின் 7-ம் இடத்து பார்வையால் பல்வேறு நன்மைகளை தருவார். முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்பம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று நல்ல வசதிகளையும் பெற்று வாழ்வீர்கள். பொதுநல சேவகர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நல்ல அந்தஸ்தில் இருப்பர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் ஆசிரியரிடம் நற்பெயரை எடுப்பர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கா விட்டாலும் உழைப்புக்கு தகுந்த கூலி வரும். வழக்கு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு வக்கீல் -களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் குதூகலமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் குருபார்வை-யால் கைகூடும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பதவி உயர்வு காண்பர்.
உடல் நலம் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.
பரிகாரம்: கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டக்குடி, பட்டமங்கலம் போன்ற ஏதாவது ஒரு குருத்தலத்திற்கு சென்று வாருங்கள். .குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.