மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறியதால் வாலிபர் தற்கொலை
1 min read
The young man committed suicide because he said he did not like the groom
19.3.2022
பாவூர்சத்திரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் சாவு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த அரியப்பபுரத்தை சேர்ந்தவர் அருணாசல பாண்டியராஜ். இவரது மகன் கதிரேசன் (வயது27).
இவர் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த வியாழக்கிழஐம கதிரேசன் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கதிரேசன் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
மாப்பிள்ளை பிடிக்கிவல்லை
கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிரேசனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து உள்ளனர். அப்போது பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கதிரேசன் பெற்றோருடன் சேர்ந்து பார்த்துள்ளார்.
கதிரேசனும், அந்த பெண்ணும் இருவரது செல்போன் எண்களை பரிமாறி கொண்டுள்ளனர். பின்னர் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இளம்பெண்ணின் வீட்டாருக்கு கதிரேசனை பிடிக்காததால் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்துள்ளனர். இதனால் கதிரேசன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். யாரிடமும் பேசாமலும் இருந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.