குலாம்நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் விருது; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
1 min read
Padma Bhushan Award for Ghulam Nabi Azad; Presented by President Ramnath Govind
21.3.2021
பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குலாம்நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பத்ம விருதுகன்
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
2022- ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது பட்டியலில் 34 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள்.
பிபின் ராவத்
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதில் முக்கியமாக மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம விபூஷன் விருதை பிபின் ராவத்தின் மகள்கள் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
குலாம் நபி ஆசாத்
மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியுமான குலாம் நபி ஆசாத் பத்ம பூஷன் விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் குர்மீத் பாவா (மரணத்திற்குப் பின்), டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், ராஜீவ் மெஹ்ரிஷி, கோவிஷீல்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் சைரஸ் பூனவல்லா உள்ளிட்டோர் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டனர்.
மேலும் இசைக் கலைஞர் பல்லேஷ் பஜந்தரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் ஜனாதிபதியிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டனர். மற்ற விருதுகள் வருகிற 28-ந்தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.