June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு

1 min read

Field study of Agricultural College students

22.3.2022
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, கோவை வேளாண் ௧ல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமங்களுக்குச் சென்று கள ஆய்வு நடத்தினார்கள்.

அந்த வகையில் மாணவிகள் பா. சாருமதி, ஜெ.துர்காதேவி,ப. கீதாலட்சுமி, ஜோதி யாகன்டி, கு.கீர்த்தனா பிரியா, ரா. மின்னுஷா, ரா. முத்துச்செல்வி, செ.நந்தினி, மா.பிரியதர்ஷினி,அ. சிநேகா மற்றும் ஷ. ஸ்ரீநிதி ஆகிய 11 பேர் கொண்ட குழு கிராமப்புற வேளாண் ௮னுபவப் பயிற்சியின் ஒ௫ பகுதியாக கோவை மாவட்டம், ௮ன்னூர் வட்டாரம், மங்காபாளையம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு வேளாண்மை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சமூக வரைபடம், வள வரைபடம், சிக்கல் மரம், காலக்கோடு, பருவகால காலண்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் அந்த ஊர் மக்களையே ஈடுபடுத்தி அக்கிராம அமைப்பு முறை மற்றும் தற்போதைய நிலையை வரைபடம் மூலமாக அவர்களே அறிந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு மேலும் என்னென்ன வசதிகள் தேவை என்பதனையும் புரிய வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.