ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை – ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்
1 min read
Sasikala did not plot against Jayalalithaa – O. Panneerselvam confession
22.3.2022
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 2-வது நாளாக இன்று ஆஜரானார். விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் அளித்த பதிலில் கூறியதாவது:
சதிதிட்டம் இல்லை
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை.
ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கூறியபோது, என்னை அழைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்ட சொன்னார் ஜெயலலிதா.
பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வர் என ஜெயலலிதா கூறினார்.
மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தபோது, என்னிடம் அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கவர்னரை சந்தித்து கடிதம் அளிக்கவும் ஜெயலலிதா கூறினார்.
ஓபிஎஸ் தான் முதல்வர் எனவும், அவரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார்.
ஜெயலலிதா கூறியபோது அழுது கொண்டிருந்த என்னை நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டி
விசாரணை முடிந்தபின் செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் எதிர்தரப்பு கேள்விகளுக்கு உரிய பதில்கள் அளித்துள்ளேன்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளேன்.
ஆறுமுகசாமி ஆணையம் 7 தடவை எனக்கு சம்மன் அனுப்பியது. அதில் 6 முறை மட்டுமே கடிதம் வந்தது. 2 முறை மட்டுமே ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதால் காரணத்தை ஆணையத்திடம் விளக்கினேன்.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். ஆணையத்தின் விசாரணை திருப்தியாக உள்ளது. முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதாவை பார்க்கவில்லை
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எக்மோ கருவி அகற்றும் வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை.
எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.