June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 35 people in Tamil Nadu today

1.4.2022
தமிழ்நாட்டில் நேற்றை ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது. இன்று 35 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிகத்தில் கொரோனா

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் இன்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 39-ஐ விட குறைவாகும். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 51 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.