June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு இலவச ஸ்கூட்டர்; தலைவர் வழங்கினார்

1 min read

Free scooter for Arumuganeri Municipal Councilors; Presented by the Chairman

1.4.2022
ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு ஸ்கூட்டர் மற்றும் மாதம் 10 லிட்டர் பெட்ரோலை பேரூராட்சி தலைவர் இலவசமாக வழங்கினார்

இலவச ஸ்கூட்டர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சியில் உள்ள 17 வார்டு கவுன்சிலர்களுக்கு ஸ்கூட்டர் மற்றும் அதற்கு மாதம் 10 லிட்டர் பெட்ரோலும் அப்பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் இலவசமாக வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் தினமும் தங்கள் வார்டுகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து உடனடியாக அதனை சரி செய்து கொடுப்பதற்கு வசதியாக ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் புதிய வசதியை தன் சொந்த செலவில் ஏற்படுத்தி தந்துள்ளார். அதாவது, 17 வார்டு கவுன்சிலர்களுக்கும் இலவசமாக ஸ்கூட்டர் வாங்கி கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி, தன் சொந்த செலவில் 17 கவுன்சிலர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 1) ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தமிழக மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 17 வார்டு கவுன்சிலர்களுக்கும் ஸ்கூட்டரை வழங்கினார். மேலும் வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்வதற்காக மாதம்தோறும் 10 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படும் எனவும் பேரூராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார். இதனால், கவுன்சிலர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.