திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
1 min read
The sea receded at Thiruchendur
3.4.2022
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியுள்ளதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடல் உள்வாங்கியது
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் இன்று திடீரென கடல் 200 மீட்டருக்கு உள்வாங்கியுள்ளது. இதனால். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அச்சத்துடன் கடலை பார்த்து வருகின்றனர்.
இதனால், கடலின் அடியில் இருக்கக்கூடிய பாறைகளை தற்போது காண முடிகிறது. கடலில் நீராடுவதற்கு வந்த ஒருசிலர், இந்த பாறைகளின் மீது ஏறி நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.