சிவசங்கர் பாபாபாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன்
1 min read
Supreme Court grants conditional bail to Shivshankar Baba
8.4.2022
சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
சிவசங்கர் பாபா
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், கடந்த அக்டோபரில் அளித்த புகாரில் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
நிபந்தனை ஜாமீன்
இந்த உத்தரவை எதிர்த்து சிவசங்கர் பாபா சார்பில் வக்கீல் ஸ்வாதி ஜிந்தல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் 8-ந்தேதி விசாரித்தது. மேல்முறையீட்டு மனு தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், சாட்சிகளை அச்சுறுத்தி ஆதாரங்களை கலைத்துவிடுவார்.
எனவே சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்க முயற்சித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிட்டுளள்து
குற்றம் தொடர்புடைய பள்ளி வளாகத்துக்குள் சிவசங்கர் பாபா நுழையக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது