தமிழகத்தி்ல் இன்று 21 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 21 people in Tamil Nadu today
9.4.2022
தமிழகத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 29 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (ஏப்ரல் 8 ம் தேதி) 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 9 ம் தேதி) பாதிப்பு 21ஆக சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 20,297 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 34,53,054 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,57,98,524 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 14 பேர் ஆண்கள், 7பேர் பெண்கள். இன்று 29 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,800 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று ( ஏப்ரல் 8ம் தேதி) 10 ஆக இருந்த நிலையில் இன்று ( ஏப்ரல் 9 ம் தேதி) 9 ஆக குறைந்து உள்ளது.