ஜோதிடர் கூறிய படி வீட்டை ஒருநாள் பூட்டியதால் ரூ.3.46 லட்சம் நகை பறிபோனது
1 min read
According to the astrologer, the house was locked one day and Rs 3.46 lakh worth of jewelery was stolen
13.4.2022
”சாவு கண்ட வீட்டில் ஒருநாள் யாரும் இருக்கக்கூடாது” என ஜோதிடர் பேச்சை கேட்டு குடும்பத்தினர் வெளியே தங்கிய போது சுமார் ரூபாய் 3.46 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போனது.
ஜோதிடர்
சிமோகா நவுலே ஜோதி நகரை சேர்ந்த ருத்ரேஷ். இவரின் அண்ணன் வேதாந்தா சமீபத்தில் இறந்து போயிருந்தார். இந்நிலையில் ஜோதிடர் ஒருவர் சாவு கண்ட வீட்டில் ஒருநாள் யாரும் இருக்கக்கூடாது, அப்படி இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆகாது என கூறியுள்ளார்.
இதனால் ருத்ரேஷ் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு தனியார் தங்கும் விடுதியிலும் சொந்தகாரர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
திருட்டு
இதனால் அன்று வீட்டில் யாரும் இல்லாததை கவனித்த திருடர்கள் வீட்டினுள் நுழைந்து பீரோவில் இருந்த 60 கிராம் தங்க நகைகளையும், ரூபாய் 10 ஆயிரம் திருடிச் சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டிற்க்கு வந்து பார்த்த போது திருடு போயிருப்பதை கண்டு ருத்ரேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஷிமோகா ஜெயநகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.