June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

’மதவாத பதற்றம்’ பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது;மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

1 min read

Prime Minister’s silence on ‘religious tensions’ shocking; Opposition leaders, including MK Stalin

புதுடெல்லி,ஏப்.17-
“மதவாத பதற்றம்’ பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என மு.க.ஸ்டாலின், சோனியா உள்பட எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டறிக்கை

இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை விடுத்த்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

உணவு, உடை , நம்பிக்கை, பண்டிகை மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்னையை தூண்டுகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்பு வாத வன்முறையை கண்டிக்கிறோம். மத ரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து மக்கள் அமைதி காக்க வேண்டும்.

நாட்டில் வெறுப்பு பேச்சை தூண்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது. சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.