உடலை தானம் செய்த மறைந்த பேராசியர் அறிவரசன் உருவப் படம்-பழ நெடுமாறன் திறந்து வைத்தார்
1 min read
The body was donated by the late Professor Arivarasan who opened the film-Fruit Nedumaran
19.4.2022
உடலை தானம் செய்த மறைந்த பேராசியர் அறிவரசன் உருவப் படத்தை பழ நெடுமாறன் திறந்து வைத்தார்.
பேராசிரியர்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பரமகல்யாணி கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர் குமாரசாமி. இவர் அறிவரசன் என்ற பெயரில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். பகுத்தறிவை பரப்பும் வகையில் அவரது நூல்கள் விளங்கும்.
கடையத்தில் வசித்த அவர் பணிநிறைவு பெற்ற பினனர் திருவள்ளுவர் கழகத்தை உருவாக்கி இலக்கியப்பணி ஆற்றினார். அதன் மூலம் திருக்குறள் வகுப்பை தொடர்ந்து நடத்தினார். அவருக்கு பைந்தமிழ் பகலவன் என்ற பட்டம் கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.
இவர் இலங்கை உள்பட பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு பாடம் விளக்கம் சொல்லிக் கொடுத்துள்ளார். மறைந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனிக்கு தமிழ் பாடம் எடுத்துள்ளார்.
அவர் உயிருடன் இருக்கும்போதே தனது உடலை தானம் கொடுக்க ஒப்புதல் வழங்கி இருந்தார். அதன்படி அவர் மறைந்ததும் அவரது உடல் நெல்லை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக கொடுக்கப்பட்டது.
அவருக்கு கடையத்தில் நினைவஞ்சலி கூட்டம் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடந்தது.
படம் திறப்பு
இந்த நிலையில் அவர் பிறந்த ஊரான இராயகிரியில் நடந்தது. உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு அறிவரசன் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, தற்போது அரசு அலுவலங்களில் தலைவர்கள் படம் வைப்பதில் தகராறு வருகிறது. ஆனால் திருவள்ளுவர் படத்தை வைத்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். எனவே அனைத்து அரசு அலுவலங்களிலும் அவரது படத்தை மட்டும் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பேசினார்.
கடையம் திருவள்ளுவர் கழகம் கல்யாணி சிவகாமிநாதன் பேசும்போது தான் அறிவரசன் அவர்கள் தமிழில் எங்கும் தவறு வந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் என்று புகழந்துரைத்தார். மேலும் தான் அவரது மாணவர் என்றும் பெருமையாக கூறினார்.
நிகழ்ச்சிக்கு தமிழ்சங்கத் தலைவர் ச.குருசாமி தலைமை தாங்கினார். அறிவழகன் வரவேற்றார். கோமதிநாயகம், இளஞ்செழியன் உள்பட பலர் பேசினார்கள். பொருளாளர் ராசேந்திரன் நன்றி கூறினார்.