கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் 6 மாணவிகள் தேர்வு புறக்கணிப்பு-வழக்கு தொடர்ந்த 6 பேர் தேர்வு எழுதினர்
1 min read
Hijab affair in Karnataka 6 students wrote the exam following a boycott-case
23.4.2022
ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் மாணவிகள் 6 பேர் தேர்வை புறக்கணித்தனர். அதே நேரம் வழக்கு தொடர்ந்த 6 பேர் தேர்வு எழுதினர்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்தது. அதனால் மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத மறுப்பு
இந்த நிலையில், உடுப்பி கல்லூரியில் 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வு எழுத வந்தனர். அப்போது ஹிஜாப்பை நீக்கிவிட்டு சீருடையுடன் தேர்வு எழுத வருமாறு ஆசிரியர்கள் கூறினர். இதனை ஏற்க மறுத்த அந்த 6 மாணவிகளும் தேர்வை புறக்கணித்தனர்.
ஹிஜாப் வழக்கைத் தொடர்ந்த 6 மாணவிகள் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு அறைக்குள் சென்றனர்.