இந்தியாவில் ஒரு நாளில் 2,593 பேருக்கு கொரோனா; 44 பேர் பலி
1 min read
Corona for 2,593 people a day in India; 44 people were killed
24.4.2022
இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாளில் 2,593பேருக்கு பாதிப்பு உறுதியானது. 44 பேர் இறந்தனர்.
இந்தியாவில் கொரோனா
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு தினமும் ஏறுமுகம் கண்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை 2,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட் நிலையில் சனிக்கிழமை 2,527 ஆக உயர்ந்து. அது இன்று காலை 2,593 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,54,952 லிருந்து 4,30,57,545 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் பலியாகினர். இதுவரை 5,22,193 பேர் உயிரிழந்தனர்
இந்தியாவில் ஒரே நாளில் 1,755 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,17,724 லிருந்து 4,25,19,479 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,079 லிருந்து 15,873 ஆக உயர்ந்தது.
தடுப்பூசி
இந்தியாவில் ஒரே நாளில் 19,05,374 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 187.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.