June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

1 min read

Rs 20,000 crore projects in Kashmir – Prime Minister Modi launched

24.4.2022
காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சென்றார்.
காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

500 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் தொடக்கம், டெல்லி – அமிர்தசரஸ் – கத்ரா விரைவுசாலைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ராட்லே மற்றும் க்வார் புனல் மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ரூ 3 ஆயிரத்து 500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாணி கால் குவாசி கண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையையும் பிரதமர் திறந்து வைத்தார் .

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரில் கிராம சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

வளர்ச்சி

காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த ஆண்டு பஞ்சாயத்து ராஜ் தினம் ஜம்மு காஷ்மீரில் கொண்டாடப்படுவது ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை எட்டியதும், இங்கிருந்து உங்கள் அனைவருடனும் உரையாடுகிறேன் என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

ஜம்மு காஷ்மீரில் அனைத்து மட்டத்திலும் ஜனநாயகம் சென்றடைந்தது பெருமைக்குறிய விஷயம். இங்கு முதலீடு செய்ய ஏராளமான முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும் ஜம்மு காஷ்மீர் தற்போது முன்னுதாரணமாக திகழ்கிறது. கடந்த 2, 3 வருடங்களில் ஜம்மு காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.