June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 72 people in Tamil Nadu today

26/4/2022
தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மேலும்(இன்று) 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 72 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37-ல் இருந்து 52 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 362 இல் இருந்து 404 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவால் இன்றும் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.