தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 77 people in Tamil Nadu today
27.4.2022
தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 52இல் இருந்து 59 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 72 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 77 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 404இல் இருந்து 447 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் இன்று உயிரிழப்பு ஏதும் பதிவாகில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.