தஞ்சாவூர் தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி அறிவிப்பு
1 min read
Rs 2 lakh for Thanjavur chariot victims’ PM announces
27.4.2022
தஞ்சை தேர்விழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி இரங்கல்
தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூரில் நடந்த தேரோட்டத்தில் சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிகப்பெரிய சோகம். அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்சாரம் தாக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மோடி இரங்கல்
தஞ்சை தேர்விழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரூ.2 லட்சம்
தமிழகத்தின் தஞ்சாவூரின் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனையளிக்கிறது. படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.