June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தனிப்பட்ட முடிவு எடுக்க அதிகாரமில்லை-சுப்ரீம் கோர்ட்டு கருத்து

1 min read

The governor has no power to make personal decisions on the issue of the release of Perarivalan – Supreme Court opinion

27.4.2022
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தனிப்பட்ட முடிவு எடுக்க அதிகாரமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்தசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்வதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என்று குறிப்பிட்டனர்.மேலும் கவர்னரின் அதிகாரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:-

முரண்

மாநில அமைச்சரவை அனுப்பக் கூடிய பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப என்ன அதிகாரம் உள்ளது?
பேரறிவாளன் விவகாரத்தில் கவனரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. கவர்னர், ஜனாபதியின் அதிகாரங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?
மாநில அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக கவர்னர் செயல்பட்டால், அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். மாநிலகவர்னர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல முடியாது .

ஒருவாரத்தில்…

பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் . பேரறிவாளன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் தமிழக அரசும், வழக்கறிஞரும் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.