தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மின்சாரம் பயன்பாடு – செந்தில் பாலாஜி தகவல்
1 min readUnprecedented use of electricity in the history of Tamil Nadu – Senthil Balaji Information
29.4.2022
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மின்சாரம் பயன்பாடு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
மின்சார பயன்பாடு
தமிழகத்தில் ஒருநாள் மின்பயன்பாடு வரலாற்றில் இல்லாத வகையில் நேற்று ஒரேநாளில் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
‘நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 MW.இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328மி.யூ / 17,196 MW’ என பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 27ம் தேதி அதிகபட்சமாக 17,196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 MW.இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.