June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 89 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 89 people in Tamil Nadu today

7.5.2022
தமிழகத்தில் இன்ற 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்று 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 89ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 30 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 42 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனாவால் இன்று உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 466ல் இருந்து 499 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.