July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா-10 பேர் உயிரிழப்பு

1 min read

Corona-10 deaths out of 2,364 new deaths in India

19.5.2022
இந்தியாவில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை 1,569 புதன் கிழமை 1,829 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று காலை 2,364 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 2,549 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,87,259 லிருந்து 4,25,89,841 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,303 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,647 லிருந்து 15,419 ஆனது. இந்தியாவில் இதுவரை 191.79 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 13,71,603 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.