சென்னை ஐஐடி வளாத்தில் நடத்திய 5 ஜி சேவை சோதனை வெற்றி
1 min read
Successful test of 5G service at IIT Chennai
20/5/2022
மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐஐடி வளாகத்தில் வளாத்தில் நடத்திய 5 ஜி சேவை சோதனை வெற்றி பெற்றது.
5 ஜி சேவை
இந்தியாவில் 3ஜி, 4ஜி அலைக்கற்றைகள் ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. விரைவில் 5ஜி சேவை துவங்கப்பட உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருவதாக சமீபத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், ‛5ஜி சேவை செயல்பாட்டுக்கு வந்தால் இந்திய பொருளாதார மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.35 லட்சம் கோடி வளர்ச்சி காணும்’ எனவும் தெரிவித்தார்.
சோதனை
இந்த நிலையில் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஐடி வளாகத்தில் நாட்டிலேயே முதன்முறையாக 5ஜி வீடியோ, ஆடியோ கால் சேவையை சோதித்து பார்த்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‛5ஜி கால் சேவையை சென்னை ஐஐடி வளாகத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்த்தேன். ஒட்டுமொத்தமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெட்வொர்க். நமது நாடால், நமது நாட்டுக்காக, உலகத்திற்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது பிரதமரின் கனவு.’ எனத் தெரிவித்தார்.