உத்தரபிரதேச சாலை விபத்தில் 5 பேர் பலி
1 min read
5 killed in Uttar Pradesh road accident
24.5.2022
உத்தரப்பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதி இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்து
உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷர் – மீரட் நெடுஞ்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உத்தரகண்டில் உள்ள கேதர்நாத் சன்னிதானத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை புலந்த்ஷரில் உள்ள குலாவதி பகுதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
5 பேர் பலி
இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேர் மீரடில் உள்ள மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் பலியானோரின் அடையாளங்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள், ஹர்திக் ( வயது 6 ), வன்ஷ் (வயது 5), ஷாலு ( வயது 21 ), ஹிமான்சூ ( வயது 25) மற்றும் பரஸ் ( வயது 22 ) ஆவர்.
உத்தரப்பிரதேச முதல் – மந்திரி யோகி ஆதித்யநாத் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.