தமிழகத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 59 people in Tamil Nadu today
24.5.2022
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 59 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 36 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனா
கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34 லட்சத்து 54 ஆயிரத்து 984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 354 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 36 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.
இதுவரையில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 605 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 19 பேருக்கும், திருவள்ளுரில் 4 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
==
மாவட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு – மந்திரி, எம்.எல்.ஏ. வீடுகளுக்கு தீ வைப்பு ; பெரும் வன்முறை தினத்தந்தி மே 24, 9:55 pm Text Size மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. அமராவதி, ஆந்திர மாநிலத்தில் கொனசீமா என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் பெயரை மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பிஆர் அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என மாற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொனசீமா பரிரக்ஷனா சமிதி, கொனசீமா சாதனா சமிதி உள்பட பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் வன்முறையாக மாறியது. அப்போது, போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது அவை தோல்வியிலேயே முடிந்தன. போராட்டக்காரர்கள் அம்மாநில போக்குவரத்துத்துறை மந்திரி விஸ்வார்ப் மற்றும் எம்.எல்.ஏ. சதீஸ் ஆகியோரின் வீடுகளை தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதியே போர் களம்போல காணப்பட்டது. இதனை தொடர்ந்து வன்முறை நடந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை மாவட்டத்தின் வேறு பகுதிகளுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது.