கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
1 min read
Enforcement case against Karthi Chidambaram
25.5.2022
விசா முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த புகாரில் சிபிஐ தொடர்ந்து அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் ஏற்கனவே கைதிதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.