தமிழகத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 107 people in Tamil Nadu today
5.6.2022
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (ஜூன் 5) 12,944 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 43; காஞ்சிபுரம் 16; செங்கல்பட்டில் 13; திருவள்ளூர் 7; கோவை 6; திருச்சி மற்றும் மதுரை 3; ஈரோடு, கன்னியாகுமரி 2; கடலுார், தர்மபுரி, நீலகிரி ,ராமநாதபுரம், ராணி்பேட்டை , சேலம், வேலுார் மற்றும் விழுப்புரம் தலா ஒருவரையும் சேர்த்து 105 பேர் மற்றும் மத்தியபிரதேசம் மற்றும் அமெரிக்கா சென்று திரும்பிய தலா ஒருவரையும் சேர்த்து 107 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,56,083 ஆக அதிகரித்துள்ளது. இன்று 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,17,222 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
சென்னையில் நேற்றிலிருந்து சற்று தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் 70 பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.