June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 4,270 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 4,270 newcomers in India

5.6.2022
இந்தியாவில் புதிதாக 4,270 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல்

இந்தியாவில் சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த நாட்டில் இந்த தொற்று 4,041 பேருக்கு பாதித்தது. சனிக்கிழமை காலை மீண்டும் 4 ஆயிரத்துக்கு கீழே பாதிப்பு பதிவானது.
நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் சரியாக 3,962 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் எகிறியுள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேர பாதிப்பை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 4,270 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 962 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 052 ஆக உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.