June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

வாகன நிறுத்தத்தில் பயங்கர தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

1 min read

Terrible fire accident in the parking lot; Damage to more than 100 vehicles

8/6/2022
வாகன நிறுத்தத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் கருகி சேதம் அடைந்தன.

தீவிபத்து

டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் உள்ள வாகன நிறுத்தத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து கருகின.
தகவல் அறிந்து உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுப்படுத்தினர். 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும், அதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 30 புதிய இ-ரிக்‌ஷாக்கள் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த பயங்கர தீ விபத்தில், 50 பழைய இ-ரிக்ஷாக்கள் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.