ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் சாவு
1 min read
17 lakh people die every year in India due to malnutrition
11.6.2022
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
மக்கள் தொகை
உலக அளவில் சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. எனினும், சீனாவுடன் ஒப்பிடும்போது மிக குறைந்த நில பரப்பளவே இந்தியா கொண்டுள்ளது. இந்நிலையில், போதிய ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைக்காமல் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர் என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
ஆரோக்கிய உணவு என்று வரும்போது, அதிக அளவில் உணவு அல்லது குளிர்பானம் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்பது அர்த்தமல்ல. நல்ல சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும். இந்தியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட வயது வந்த இளைஞர், இளைஞிகள் நாளொன்றுக்கு 35.8 கிராம் அளவே பழங்களை எடுத்து கொள்கின்றனர். ஆனால் ஒரு நாளைக்கு 200 கிராம் பழங்களை எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதேபோன்று குறைந்தபட்சம் தினசரி 300 கிராம் அளவுள்ள காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், பிடித்தும், பிடிக்காமலோ அல்லது கிடைக்காமலோ உள்ளிட்ட வேறு சில காரணங்களால் 168.7 கிராம் அளவுள்ள காய்கறிகளையே எடுத்து கொள்கின்றனர். நாள் ஒன்றுக்கு பருப்பு வகைகளை 24.9 கிராம் அளவுக்கே (தினசரி இலக்கில் 25 சதவீதம்) அவர்கள் எடுத்து கொள்கின்றனர். தினமும் 3.2 கிராம் அளவு கடலைகள் (தினசரி இலக்கில் 13 சதவீதம்) உணவாக உட்கொள்கின்றனர் என தெரிவிக்கிறது.