June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 249 ஆக உயர்வு

1 min read

Corona infestation rises to 249 in Tamil Nadu today

12.6.2022
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 249 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 217 ஆக இருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு 249 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; – தமிழகத்தில் மேலும் 249- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 382 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து இன்று 148 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா பாதிப்பைக் கண்டறிய இன்று பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 065 ஆகும். அதிகபட்சமாக சென்னையில் 124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.