அருணாசலப்பிரதேசத்தில் 2 ராணுவ வீரர்களை இரு வாரமாக காணவில்லை
1 min read
Two soldiers have been missing in Arunachal Pradesh for two weeks
12.6.2022
அருணாச்சல பிரதேசத்தில் 2 ராணுவ வீரர்கள் காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ராணுவ வீரர்கள்
அருணாச்சலத்தில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தின் பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு கடந்த மே மாதம் 28-ந் தேதி முதல் காணவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகும் இரண்டு வீரர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் பணியமர்த்தப்பட்ட நாயக் பிரகாஷ் சிங் மற்றும் லான்ஸ் நாயக் ஹரேந்தர் சிங் ஆகியோர் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் தவறுதலாக விழுந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இரு ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.