சாம்பவர்வடகரை அருகே கோவில் உண்டியலில் பணம் திருடிய 3 பேர் கைது
1 min read
3 arrested for stealing money from a temple near Sambavarvatakarai
16.6.2022
சாம்பவர்வடகரை அருகே கோவில் உண்டியலில் பணம் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம்: சாம்பவர் வடகரை அருகே உள்ள சுந்தர பாண்டிய புரத்தில் சுடலை மாடன் சுவாமி கோவில் மற்றும் திருச்சிற்றம்பலம் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் மர்ம நபர்கள் சிலர் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடிச்சென்றனர்.
இதுதொடர்பாக சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக சில்லரை காசுகளை மாற்று வதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கிருந்த 3 பேரும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகை குமார்(வயது 27), சின்ன வைரவன் தெருவை சேர்ந்த மேத்தா என்ற கருவாலி (18), முஸ்லிம் தெருவை சேர்ந்த மாடசாமி (21) என்பதும், அவர்கள் கோவில் உண்டியல்களில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.