June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு

1 min read

10 per cent reservation in the paramilitary for soldiers selected under the Agnipath sche

18.6.2022

அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு ஒன்றிய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி இந்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.

10 சமவீதம்

இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், “அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், அக்னிவீரர்களின் முதல் பேட்சுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

me

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.