June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

திருமணமான 5-வது நாளில் மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்

1 min read

The father-in-law who took the curry party and hacked his nephew to death

18.6.2022
கறி விருந்துக்கு அழைத்து மருமகனை வெட்டி கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

கறிவிருந்து

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சேர்ந்த சிற்றரசு மகன் முத்தரசன் (வயது 23), அதே திருத்துறைப்பூண்டி நகர்ப் பகுதியில் உள்ள மங்கல நாயகி புரத்தைச் சேர்ந்த அரவிந்தியாவை கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 15-ஆம் தேதி மாமனார் வீட்டில் நடைபெற்ற விருந்திற்கு, முத்தரசன் தனது மனைவியுடன் சென்றுள்ளார். விருந்தில் பங்கேற்ற அவர், அங்கேயே தங்கியுள்ளார்.

ஆனால், யாரும் எதிர்பாரத விதமாக புதுமாப்பிள்ளை முத்தரசன் மாமனார் வீட்டின் அருகே ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். முத்தரசன் சடலத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் முத்தரசன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், முத்தரசன் அவரது மாமனார் ரவிச்சந்திரனை பலர் முன்னிலையில் எதிர்த்துப் பேசியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் மருமகன் முத்தரசனை வெட்டி கொலை செய்ததது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.