July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தேர்வில் தோல்வி; 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

1 min read

Failed the exam; 10th class student commits suicide by hanging

21.5.2022
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்த அரசு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த பாலு இவருக்கு இரண்டு மகள்கள். இரண்டு மகன்கள்.
பாலும் அவர் மனை சவிதாவும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவருடைய மூத்த மகள் ரஞ்சனி நாகவேடு பகுதியில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் நேற்று அதற்கான முடிவுகள் வெளிவந்தது. இதில் ரஞ்சனி கணிதம் மற்றும் சமூக அறிவியலில் தேர்ச்சி பெறவில்லை இதனால் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தார்.

தற்கொலை

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் தாலுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.