தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,063 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,063 people in a single day in Tamil Nadu today
23.6.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 23 ம் தேதி) ஒரே நாளில் 1,063பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
மாநிலத்தில் இன்று (ஜூன் 23) 22,946பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 497; செங்கல்பட்டு 190; திருவள்ளூர் 63,கோவை 50 , கன்னியாகுமரி 49, காஞ்சிபுரம் 28, திருச்சி, திருநெல்வேலி 18, தூத்துக்குடி 17, சிவகங்கை 14 சேலம், மதுரை 13; திருப்பூர் 9,ஈரோடு, நீலகிரி , விருதுநகர் 8, தென்காசி 7, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி 5,தி.மலை , பெரம்பலூர் , தஞ்சாவூர் 4, விழுப்புரம், கடலூர் 3, நாகை, நாமக்கல் திண்டுக்கல் கரூர் மாவட்டங்களில் தலா 2,மயிலாடுதுறை,திருவாரூர், தர்மபுரி,புதுக்கோட்டை, தேனி, தலா ஒன்று ராமநாதபுரம் , கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டஙகளில் பாதிப்பு எதுவுமில்லாமல் மொத்தம் 1,063 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,64,131ஆக அதிகரித்துள்ளது. இன்று 567பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,20,931ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (22 ம் தேதி) 345ஆக இருந்த நிலையில் இன்று (23ம் தேதி)சென்னையில் 497ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,678 ல் இருந்து 5,174ஆக அதிகரித்துள்ளது.