June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தபால்துறை சார்பில் அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி

1 min read

All India letter writing competition organized by postal department

5.7.2022
இந்திய தபால் துறை சார்பில் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.

கடிதம் எழுதும் போட்டி

இந்திய தபால் துறை சார்பில் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. கடிதம் எழுதும் போட்டி இதுகுறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய தபால் துறை சார்பில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த போட்டி நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடிதம் எழுதும் போட்டி 1.7.2022 முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் இந்திய தபால் துறையின் உள்நாட்டு தபால் உறை அல்லது ஏ-4 அளவு பேப்பரில் எழுதி ‘முதன்மை அஞ்சல் துறைத் தலைவர்’ தமிழ்நாடு வட்டம், சென்னை-600002′ என்ற முகவரிக்கு 31.10.2022-க்குள் அனுப்பலாம்.
‘எனது பார்வையில் இந்தியா- 2047’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதப்பட வேண்டும். பரிசுகள் 18 வயது வரை உள்ளோர் ஒரு பிரிவாகவும், 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றொரு பிரிவாகவும் போட்டியில் பங்கேற்கலாம். இந்திய தபால் துறையின் உள்நாட்டு தபால் உறை அல்லது வெள்ளைத்தாளில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி காகித உறையில் வைத்து அனுப்பலாம். உறையின் மேல் ‘அஞ்சல் துறை கடித போட்டி’ என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். தபால் அலுவலகங்களில் விற்கப்படும் கடித உறை அல்லது வேறு உறைகள் தேவையான அளவு தபால் தலை ஒட்டப்பட்டவை மற்றும் உள்நாட்டு தபால் அட்டை மூலம் அனுப்பப்படும் தபால்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெற்றி பெறும் கடிதங்களுக்கு மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-வது பரிசு ரூ.10 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம், அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

வயது சான்றிதழ்

போட்டியில் பங்கு பெறுவோர் கடிதத்தின் மேல் ‘1.1.2022 அன்று எனது வயது 18-க்கு மேல் அல்லது 18-க்கு கீழ் என சான்றளிக்கிறேன்’ என்ற வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும். வெற்றி பெறும் போட்டியாளர்களின் வயது சான்றிதழ் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பரிசுக்கு பரிந்துரைக்கப்படும். அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.