இந்தியாவில் புதிதாக 8,815 பேருக்கு கொரோனா
1 min read
8,815 new cases of corona in India
8.7.2022
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஒருநாளில் புதிதாக 8,815 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 18 ஆயிரத்து 930 ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 85 ஆயிரத்து 554 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15 ஆயிரத்து 899 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
38 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 198 கோடியே 51 லட்சத்து 77 ஆயிரத்து 962 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.