இந்தியாவில் புதிதாக 18,840 பேருக்கு கொரோனா
1 min read
18,840 new corona cases in India
9.7.2022
இந்தியாவில் புதிதாக 18,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 18 ஆயிரத்து 815ஐ விட சற்று அதிகமாகும்.
இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 4 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 16 ஆயிரத்து 104 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
48 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரைகடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 198 கோடியே 65 லட்சத்து 36 ஆயிரத்து 288 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.