June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கீழடி அகழாய்வில் இதுவரை 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

1 min read

So far, 134 old people’s graves have been found in the underground excavations.

9.7.2022
கீழடி அகழாய்வில் இதுவரை 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

கீழடி அகழாய்வு

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகையில் 2 கட்ட அகழாய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 3-ம் கட்ட அகழாய்வு பணி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அங்கு இதுவரை நடந்த 3 கட்ட அகழாய்வுகளிலும் மொத்தம் 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3-ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை திறப்பதற்கு அதைச் சுற்றி அளவு எடுக்கப்பட்டு நூல்களால் கட்டி ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.