June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 20,038 பேருக்கு கொரோனா

1 min read

20,038 new cases of corona in India

15.7.2022
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 20 ஆயிரத்து 038 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 20,038 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 16,906 நேற்று 20,139 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,038 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,89,989 லிருந்து 4,37,10,027 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 16,994 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,28,356 லிருந்து 4,30,45,350 ஆக உயர்ந்துள்ளது.

47 பேர் சாவு

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 47 பேர் பலியாகினர். இதுவரை 5,25,604 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,36,076 லிருந்து 1,39,073 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 199.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 18,92,969 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.